சனி, 27 ஜூலை, 2013



 இந்தியா-சீனா முரண்பாடு :அபாயகரமான புரிதல் 

  
   கட்டுரை ஆக்கம்: தோழர் பாஸ்கர் 

அண்மைக் காலமாகவே இந்தியா-சீனா முரண்பாடு பற்றி பேசப்பட்டு வருகின்றது. அது உண்மையும்கூட.... 
 

இந்தியா மீது போர் தொடுக்கும் என்று எழுதும் அளவிற்கு சென்றுவிட்டது. பாதுகாப்புத்துறை விவகாரங்களை பற்றி எழுதும் ஒரு  ஆய்வாளர் சென்ற மாதம் இதை எழுதியேவிட்டார். இந்த முரண்பாடு ஏன் ஏற்படுகிறதுஇதை எப்படி தீர்ப்பதுஇதை எவ்வாறு  பயன்படுத்திக்கொள்வது என்பதைப்பற்றிய அபாயகரமான புரிதல்கள் உருவாகியுள்ளன.
இந்தியா-சீனா விற்கும் இடையிலான முரண்பாடு தத்தமது நாடுகளின் நலன் சார்ந்தே ஏற்படுகின்றது. அந்த நலன் மக்களின் நலன் அல்ல. மாறாக ஆளும் வர்க்கங்களின் நலனே. இன்றைய சீனாவானது மாவோ காலத்திய சீனா அல்ல. அது சீனாவின் பெரும்பான்மை மக்களுக்கான சீனாவும் அல்ல. சீனாவின் மக்களை கொடூரமாகச் சுரண்டித் தொழிலாளர் நலன்களை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாத பாசிசம்தான் அந்த நாட்டை ஆண்டு வருகிறது.  தொழிற்சாலைகள் என்ற பெயரில் வியர்வைக் கூடங்களில் (Sweat Shops) தொழிலாளர்களை வாட்டி வதைத்து  வருகிறது. இதன் மூலம் கிடைத்தகிடைக்கும் உபரியை மூலதனமாக்கி அமெரிக்காவுடன் உலக மேலாதிக்கத்திற்கான போட்டியில் இறங்கி உள்ளது. அதன் அங்கமாக தெற்காசியாவில் அமெரிக்காவின் இளைய பங்காளியாக உள்ள இந்தியாவுடனும் முரண்பாட்டில் உள்ளது.
இந்தியா-சீனா முரண்பாடு என்பது எல்லாஅரங்குகளிலும் வெளிப்படுகிறது. அது எல்லைச் சிக்கல்திபெத்ஈழச் சிக்கல் உள்ளிட்ட இலங்கைநேபாள மாவோயிஸ்டுகள் மீதான அμகுமுறை உள்ளிட்ட நேபாளம்பாகிஸ்தான்மியான்மர்பங்களாதேஷ்ஷாங்காய்  ஒத்துழைப்பு அமைப்பு (Sco- shanghai Co-operation Organisation),ஆசிய வளர்ச்சி வங்கி (ADB – Asian Development Bank)இந்தியாவில் சீனாவின் தொழிற்துறை  முதலிடு சீனப்பொருட்களின்இறக்குமதி (NSG – Nuclear Suppliers Group) இராணுவ முஸ்தீபு ஆகிய அரங்குகளில் வெளிப்படுகிறது.
இரண்டு நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் நோக்கமே மக்களைச் சுரண்டி மேலாதிக்கம் செய்வதே ஆகும். அவ்வாறு உள்ள நிலையில் குறிப்பிட்ட ஒரு ஆளும் வர்க்கத்தின் நலன் இன்னொரு ஆளும் வர்க்கத்தின் நலனுடன் முரண்படும்போது அது கூர்மையடைகிறது இது பொதுவானது. இந்த நிலையில் இந்திய ஆளும் வர்க்கம் மேற்கொண்ட அணுகுமுறைதான் இந்த முரண்பாட்டை கூர்மைப்படுத்தத்தொடங்கியது.
இந்தியா 1975ல் சிக்கிமை பலவந்தமாக இணைத்தது முதற்கொண்டு 2003வரை அதனை ஏற்காமல் இருந்துவந்தது சீன அரசாங்கம். சிக்கிமை இந்தியாவிற்கு வெளியே இருப்பதை போன்றே வரைபடத்தை வெளியிட்டு வந்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2004ல் சீனா சென்றபோது சிக்கிம் இந்தியாவின் அங்கம்தான் என அங்கீகரித்தது. இந்த நிலையில் இந்தியா -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்  ஏற்பட்டபோதுதான் இந்தியா-சீனா முரண்பாடு வேகம் பெறத்தொடங்கியது. இந்த ஒப்பந்தமானது தெற்காசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தின் இளைய பங்காளியாக இந்தியா சேவையாற்றி தனக்கு எதிராக ஊறுவிளைவிக்கும் என சீன அரசாங்கம் கருதத்தொடங்கியது. அது உண்மையும் ஆகும். அதன் பிறகுதான் சீனா நாம் மேலே பார்த்த அரங்குகளில் இந்தியாவுடன் தீவிரமாக முரண்படத் தொடங்கி குறிப்பிட்ட அளவில் வெற்றியும் பெற்றுவருகிறது.
இந்தியா அண்டை நாடுகளில் மேலாதிக்கம் செய்துவந்து தனிமைப்பட்டு உள்ளதால் அது சீனாவுக்கு சாதகமாகவும் உள்ளது. இதனால் பாகிஸ்தானை மேலாதிக்கம் செய்து தோற்றுவந்த இந்தியாவானது இலங்கைபங்களாதேஷ்நேபாளம் ஆகியவற்றுடன் முன்பு இருந்தாற்போல் மேலாதிக்கம் செய்ய  முடியாமல் உள்ள நிலையில்அந்த நாடுகள்  சீனாவுடன் மூலஉத்திரீதியான நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளன. மேலும் அமெரிக்காவானது பொருளாதார நெருக்கடியில் மிகவும் சிக்கி உள்ளதால் அந்தக் காரணியும் சீனாவுக்கு சாதகமாகிவிட்டது.
இனி மைய விஷயத்திற்கு வருவோம். இந்தியா- சீனா முரண்பாட்டின் முதலாவது அபாயகரமான புரிதல் சீன எதிர்ப்பிலான இந்தியதேசிய வெறியை ஊட்டுவது ஆகும். இது அண்மைக் காலமாக அதிகரித்து சீனா 2011ல் இந்தியா மீது போர் தொடுக்கும் என பூச்சாண்டி காட்டும் அளவுக்கு சென்றுள்ளது. இதன் நோக்கமானது இந்தியா-சீனா முரண்பாட்டை தீர்ப்பதற்கு இந்தியா போரைத் தொடுக்க வேண்டும் என்பதற்கு இந்தியாவில் உள்ள மக்களை தயார் செய்யவேண்டும் என்பதாகும். இதன் மூலம் இந்தியாவின் நேரடி நலனும் அதன்  எஜமானன் அமெரிக்காவின் நலனும் பாதுகாக்கப்படும் என்பதற்காகவே இந்தப் பூச்சாண்டி காட்டப்படுகிறது.
இந்தப் பூச்சாண்டியை வலதுசாரிகளே மேற்கொள்கிறார்கள். இதன்மூலம் சில பலன்களை அடையலாம் என அவர்கள் எண்μகிறார்கள் முதலாவதாக பொருளாதார பலன்அடுத்தது அரசியல் அரங்குகளிலும் பலன்கள் உள்ளன. ஒன்று இந்திய ஆளும் வர்க்கத்தின் மீதான கோபம் சீன எதிர்ப்பிலான இந்திய தேசிய வெறியாக திருப்பப்படும். அடுத்தது சிபிஐசிபிஎம் முதல் மா-லெ அமைப்புகள் வரை அரசியல் அரங்கில் ஓரங்கட்டப் பட முடியும் என எண்ணுகிறார்கள்.
ஏனெனில் சிபிஐசிபிஎம் ஆகியன சீன அரசாங்கத்தின் பக்கமே நிற்கும். மா-லெ அமைப்புகள் இரண்டு அரசாங்கங்களுக்கும் எதிராக நிற்கும். எனவே இந்த  அமைப்புகளை சீன ஏஜெண்ட்டுகள் என முத்திரை குத்தி சீன எதிர்ப்பிலான இந்திய தேசிய வெறியில் மூழ்கடித்து  விடலாம் என நப்பாசையில்  இருக்கிறார்கள். அமெரிக்கா எல்லா அரங்குகளிலும் இந்தியாவை மேலாதிக்கம் செய்து ஆட்டுவித்துவந்தாலும் இந்த வலதுசாரிகள் அமெரிக்காவோடு இந்தியா  இணக்கமாக போகவேண்டும்அப்பொழுதுதான் இந்தியாவின் நலன் பாதுகாக்கப்படும்அமெரிக்க எதிர்ப்பு என்பது எதற்கும் உதவாத வெற்று வாய்ச்சவடால்  என்றே கூறிவருகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும். இவர்கள் அமெரிக்க எடுபிடிகள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. இந்த எடுபிடிகள்  அமெரிக்காவின் நலனுக்காகவே இந்தியா-சீனா முரண்பாட்டை பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.  இந்தியா-சீனா முரண்பாட்டின் அபாயகரமான இரண்டாவது புரிதல் என்பது இந்த முரண்பாட்டை பயன்படுத்தி ஈழச்சிக்கலினை தீர்க்க எத்தனிப்பது ஆகும்.
நெடுமாறன் இதைப் பேசுகிறார். மே 18க்கு முன்பும் இதே அடிப்படையில் பேசினார். அப்பொழுது சீனாவுடன் பாகிஸ்தானையும் சேர்த்துக்கொண்டார். இவர் மட்டும் இவ்வாறு பேசவில்லை. ராமதாசும்வைகோவும்திருமாவளவனும்வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோர் இதையே வழிமொழிந்தனர். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை. மாறாகஇதே அடிப்படையிலான அணுகுமுறையில்தான் இந்தியாவின் பாதுகாப்பு கருதி இலங்கைக்கு உதவி செய்வதாகவும் இல்லாவிட்டால் சீனாவும் பாகிஸ்தானும் உதவி செய்து இலங்கை அரசாங்கத்திடம் நெருங்கிவிடுமென்று பேசியே இலங்கைக்கு உதவி செய்வதை நியாயப்படுத்தி செயற்படுத்தினர்.
இப்போது மீண்டும் அவர் தினமணியில் 17.6.2009 அன்று எழுதியே விட்டார். இந்தியா ஈழ மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று கேட்டு கேட்டு ஓய்ந்து பாதுகாப்பு மைய (security-centric) அணுகுமுறையை காட்டியாவது இந்திய ஆட்சியாளர்களை இணங்கவைக்க முடியுமா என்ற தவறான எதிர்பார்ப்பில் கேட்கிறார். அதில் சீன எதிர்ப்பிலான இந்திய தேசிய வெறியே வெளிப்படுகிறது.
முத்துக்குமார் நண்பர்கள் இயக்கத்தின் சார்பில் வெளிவந்த சீனாவின் முற்றுகையில் இந்தியா’ என்ற நூலிலும் இந்தத் தொனியே  மேலோங்கி நிற்கிறது. இந்தத் தவறான அμகுமுறையினால் ஈழ மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் இந்தியா பாதுகாப்பு மைய அணுகுமுறையினால்  ஒருக்கால் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்து பிறகு திடீரென்று அதே அடிப்படையில் அவர்களுக்கு உதவி செய்யாமல் இருப்பதும் அல்லது அவர்களை நசுக்குவதுதான் நல்லது என தலை கீழாகவும் முடிவை எடுக்கலாம். இந்தியா-சீனா முரண்பாடு தவறான புரிதலினாலும் தவறான காரணத்தினாலும் இவ்வாறு கொம்பு சீவப்பட்டுக் கொண்டிருக்கிறது.



மரிலீன் பிரென்ச் (1929 – 2009) ஒரு மறு அறிமுகம்.......

ஆங்கில மூலம்:ஹோவான் சிமித், கேற்மொஸி, எலைன் வூதமிழில்:ஜி.ரி. கேதாரநாதன்



பிரபலம் வாய்ந்த அமெரிக்கப் பெண்ணிய எழுத்தாளரும் பெண்ணிய ஆளிணிவாளரும் கல்வியாளருமாகிய மரிலீன் பிரென்ச் தமது 79 ஆவது வயதில் காலமானார். சமரசங்களுக்கு ஆட்படாது அவருக்கேயுரிய இயல்பான சுயத்துடன் எழுதிய மரிலீன் பிரென்ச் தமது முதலாவது படைப்பான Women’s Room நாவலின் மூலம் சர்வதேசளவில்  பெரும் புகழீட்டியிருந்தார். அந்த நாவலை எழுதியபோது 50 வயதை அவர் எட்டியிருந்தார். அது 77களில் வெளியானது. அக்காலகட்டத்தில் பெண்களது அனுபவங்களை  அவர்களது வாழ் நிலைமைகளைப் பெண்ணிய நோக்கில் மையப்படுத்திய ஒரு இலக்கியப் பிரதி என்ற வகையில அந்த நாவல் ஒரு முன்னோடிப் படைப்பாக முக்கியத்துவத்தைப் பெற்றிருந்ததாக பெண்ணிய விமர்சகர்கள் சிலாகிக்கின்றனர்.
பெண்ணிய எழுத்தில் சிமோன்டி பொவாரின் Second Sex க்கு நிகராகக் கலாசாரப் பண்பாட்டுத் தளத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி, பல மாற்றங்களுக்கு உந்தியதொருபடைப்பாக மரிலீன் பிரென்ச்சின் Women’s Room நாவலை அவர்கள் கருதுகின்றனர். அந்த நாவலுக்குக் கிடைத்த வரவேற்பும் பரந்தளவிலான வாசகர் பெருக்கமும் வெளியீட்டுத்துறையினருக்கு ஆச்சரியத்தையும் பிரமிப்பினையும் ஏற்படுத்தியிருந்தது. எல்லாமாக இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில், மொழி மாற்றம் செய்யப்பட்ட நாவல், விற்பனையில் 11 மில்லியன் பிரதிகளையும் தாண்டி சாதனை படைத்திருந்தது. பின்னர் அது தொலைக்காட்சி திரைப்படமாகவும் பரந்தளவிலான பார்வையாளர்களை  எட்டியுமிருந்தது.
மரிலீன் பிரென்ச் நியூயோர்க் நகரில் 1929-ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி பிறந்தார். அவரது தந்தையார் சார்ள்ஸ் எட்வேர்ட்ஸ் ஒரு பொறியியலாளராவார். அவருடைய  தாயார் இஸபெல் களஞ்சிய மொன்றில் வேலை செய்தார். பிரென்ச்சின் மூதாதையர்கள் போலந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து வந்தவர்கள். பிரென்ச்சின் இளம்  பிராயத்தின் போது குடும்பம் வறுமை நிலையிலிருந்தது. எனினும் தாயார் இஸபெல் மகளின் கல்வி இடையுறின்றித் தொடரும் வகையில் அக்கறையுடன் பாடுபட்டதால்  பிரென்ச், 1951ஆம் ஆண்டில்பட்டதாரியாக முடிந்தது. ஆங்கிலமும் தத்துவமும் அவரது பிரதான பாடங்களாக இருந்தன. பல சிரமங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில்  தளர்வடையாது கல்வியைத் தொடர்ந்து 1964ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டதாரியானார். பின்னர் கோவ்ஸ்ரா கல்லூரியிலேயே ஆசிரியத் தொழிலை நான்கு ஆண்டுகள் வரை தொடர்ந்தார். அதன் பின்னர் ஹார்வார்ட் சென்ற மரிலீன் பிரென்ச் 1972ஆம் ஆண்டில் கலாநிதிப் பட்டம்பெற்றார்.
1976-ஆம் ஆண்டு அவரது முதலாவது படைப்பு வெளிவந்தது. அது ஆங்கில இலக்கியப் பரப்பில் உன்னத சிருஷ்டியாளராக மதிக்கப்படும் ஜேம்ஸ் ஜோய்ஸின் யூலிஸஸ் பற்றியதான ஆய்வு நூல் ஆகும். ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் அதனை வெளிட்டிருந்தது. அதற்கு ஒரு வருடத்தின் பின்பு மரிலீன் பிரென்ச் சர்வதேச புகழ் அடைய காரணமான படைப்பான Women’s Room நாவல் வெளியானது. சற்றுப் பிந்தி தமது 50ஆவது வயதிலேயே நாவல் எழுதத் தலைப்பட்டவருக்கு முதலாவது படைப்பின் போது எடுத்த எடுப்பிலேயே எதிர்பாராத வகையில் கிட்டிய பணமும் செல்வாக்கும் எத்தகைய ஆதங்கமோ கிலேசமோ அடையாது கனதியான படைப்பாக்க முயற்சிகள் பலவற்றிலும்  முனைப்புடன் தொடர்ந்து ஈடுபடுவதற்கான தெம்பினை அளித்திருந்தது எனலாம்.
மரிலீன் பிரேன்ச்சுக்கும் தாயாருக்குமான உறவும் பிணைப்பும் மிக வலிமையானது. சிறு வயதிலிருந்தே அவருடைய உருவாக்கத்தில் தாயாரின் பங்கும் அவர் வகித்திருந்த  பொறுப்பும் அளப்பரியது. ஆனால் அதேவேளை தந்தையாரின் இருப்புக் குறித்து அவர் பெருமையடையவதற்கோ அல்லது பெருமிதம் கொள்வதற்கோ அவரிடம் எதுவுமே  இல்லாமற்போக நேர்ந்தது அவருடைய சோகமாகும். சிறு பிராயத்திலிருந்தே தாயார் எப்போதுமே கண் காணிப்புடன் தன்னையும் இளைய சகோதரியையும் அதிகாரம், அச்சறுத்தல் போன்றவற்றின் நிழல்கூட அண்டாதவாறு அருமைபேணி வளர்த்து வந்ததாகவும் தந்தை யார் தம்மை அடிக்க ஒரு போதும் அனுமதித்ததில்லையென்றும்  அதிகாரத்துவத்திற்கோ ஆணவத்திற்கோ தலைவணங்காப்போக்குத் தம்மிடம் வளர்ந்து வர அத்தகையதொரு இளவயதுப் பின்னணியே ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கலாம் எனவும் 2006 கார்டியன் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலொன்றின் போது கூறியிருந்தார்.

மரிலீனின் திருமணம் 1950-இல் நடைபெற்றது. அவரது கணவர் றொபோட் பிரென்ச் ஆரம்பத்தில் எழுத்தாளராக வேண்டுமென்று ஆர்வம் கொண்டிருந்தார். எனவே அவரது  நலனுக்கு முன்னுரிமையுடன் ஆதரவளிக்கும் நோக்கில் குடும்ப வருமானத்தின் பொருட்டுச் சலிப்பேதுமின்றித் தன்னை வருத்தி காரியாலய வேலைகள் பலவற்றைக் ஏற்றுக்கொண்டு செய்தார். பக்கபலமாக இருந்து மரிலீன் பிரென்ச் அவ்வாறு உதவியபோதிலும்கூட கணவரின் முயற்சி கைக்கூடவில்லை. பின்னர் அவரது கணவர் ஒரு சட்டத்தரணியானார். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக இருந்தது. இறுதியில் இருவரும் 1967ஆம் ஆண்டு விவாகரத்தின் மூலம் விலகிக் கொண்டனர்.
அப்போது அவர்களுக்கு மகளும் மகனுமாக இரு பிள்ளைகள் இருந்தனர். உடனடி நண்பர்கள் வட்டத்தைப் பொறுத்தவரை விவாகரத்துப் பெற்ற முதலாவது நபராக மரிலீன் பிரென்ச் இருந்தார். எனது கணவர், ஜெக்கேல் அன்ட் ஹைட் போன்றவர் உலகில் மிக நல்லவர் என ஏனையோர் மதிக்கும்படி வெளியுலகில் நடந்து கொள்வார். ஆனால்  வீட்டிலோ முற்றிலும் வேறுபட்ட மூர்க்கமான மிருகம் அவர்என இன்டிபென்டன்ட் பத்திரிகை நேர்காணலொன்றில் அவர் தெரிவித்திருந்தார்.
Women’s Room நாவல் ஒரு வகையில் எழுத்தாளரின் வாழ்க்கைக் கூறுகளை முழு அளவில்லாதுவிடினும் ஏதோ ஒரு விதத்தில் பிரதிபலிப்பதாக ஒரு சில விமர்சகர்கள்  தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாகக் கசப்பான திருமண வாழ்வு, விவாகரத்து மற்றும் 18 வயதான அவருடைய மகள் பலாத்காரமாக வல்லுறவுக்குள்ளாக நேர்ந்த சோக  சம்பவம் ஆகியனவற்றைக் குறிப்பிட முடியும். நாவல் அதன் பிரதான கதாபாத்திரமான அடக்க சுபாவம் கொண்ட குடும்பப் பெண்னான மிர்ரா வார்ட் தான் குழந்தைப் பிராயம்  முதல் நடுத்தர வயதுவரை எதிர்கொள்ளும் வாழ்வனுபங்களின் பின்னணியில் பரிணாமடைவதைப் பெண்ணிய நோக்கில் மிகத்துல்லியமாகச் சித்தரிக்கின்றது. அந்த  வகையில் மிர்ராவின் சுயதேடல் அடிப்படையிலானதொரு பயணமே நாவலாக உருவெடுப்பதாக, பரிணாமடைவதாகக் கூற முடியும். அத்தகைய பின்புலத்தில் சமூக கலாசார  தளத்தில் காரசாரமானதொரு பெண்நிலைவாத விமர்சனக் கண்ணோட்டம் நாவலுக்குக் கனதி சேர்க்கின்றது. அடக்குமுறைக்குள்ளாகும் பெண்ணிடம் இயல்பாகவே இருக்க  வேண்டிய நியாயமான கோபமும் விடுதலையுணர்வு மிக்க தாகமும் நாவலில் வீரியத்துடன் வெளிப்படுகிறது. எழுத்தாளரது ஆன்மாவின் உள்ளார்ந்த அதிர்வுகள் மிர்ரா வார்ட் மூலமாகவும் வேறு சில பாத்திரங்களின் வாயிலாகவும் உயிர்ப்புடன் வெளிக்கொணரப் படுகின்றன.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு கால கட்டத்தில் வெளிவந்த இந்த நாவல் பெண் எனப்படுபவள் தனக்குரிய அடையாளங்களைத்  துறந்து உறைந்துபோய்விடாது  எழுச்சி கொள்ளும் விதத்தில் எழுதப்பட்டுள்ளதாகப் பெண்ணியப் பதிப்பக நிறுவனரும் மரிலீன் பிரென்ச்சின் நீண்ட கால நண்பியுமான புளோரன்ஸ் ஹோவ் தெரிவித்திருந்தார். நாவலின் பிரதான பாத்திரம் அந்த நாவலில் வரும் நெருக்கடியானதொரு கட்டத்தில் எல்லா ஆண்களும் வன்புணர்ச்சியாளர்கள். எப்போதும்  அவர்கள் அப்படித்தான்.என்று  கூறப்படும் வாக்கியம் தப்பான அர்த்தப்படுத்தலுடன் மரிலீன் பிரென்சுடன் அடையாளப்படுத்தப்பட்டு அவரை ஒரு ஆண் இன வெறுப்பாளராகச் சுட்டுவதற்கு அல்லது குற்றஞ்சாட்டுவதற்கும் ஒரு சில விமர்சகர்களால் தந்திரோபாயமாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது மிகவும் துர்ப்பாக்கியமானதொரு நிலையாகும். அவருடைய எழுத்து ஒரு  அராஜகவகை எழுத்து என அவர்கள் குறைகூறுகின்றனர்.
அக்குற்றச்சாட்டுக் குறித்து மரிலீன் பிரென்ச் கடும் கொதிப்படைந்துள்ளதுடன் உண்மையில் தான் ஆண்கள் வெறுப்பாளர் அல்லவென்றும் ஆண்கள் மீது எதிர்க்கக்கூடிய அம்சம்  அவர்களிடமிருக்கும் மேலாதிக்கக் குணாம்சமேயழிய வேறில்லையென லண்டன் டைம்ஸ் பத்திரிகையில் விபரித்துள்ளார். சொல்முறையில் கவர்ச்சி, கச்சிதம்  போன்றவற்றுக்கு எத்தகைய முக்கியத்துவமும் அளிக்காது உள்ளார்ந்த நேர்மையுடனும் கோபத்துடனும் வெளிப்படும் நாவல், வாசிப்பு ஈர்ப்பிணைத் தக்கவைத்திருப்பதாக அப்பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொள்ளும் விதத்தில் உண்மைக்கு நெருக்கமாக ஆவணத்தன்மை சார்ந்ததொரு படைப்பாக வெளிப்படுவதைஅவதானிக்க முடியுமெனவும்  கூறப்படும் விமர்சன பூர்வமான கருத்தினை நாவல் குறித்த ஒரு நியாயமான மதிப்பீடென ஒரு வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.
சமகால பெண்ணிய எழுத்தாளர்களுக்குத் தனித்துவமிக்க பெண்ணிய எழுத்தாளராகவும் அதனிலும் பார்க்கக் கூர்மையான பெண்ணிய ஆய்வாளராகவும் கல்வியாளராகவும்  மரிலீன் பிரென்ச் விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார். ஜோங், பிரீடென் மற்றும் பத்திரிகை ஆசிரியருமான குளோரியோ ஸ்ரீனெம் ஆகியோர் அவரது சமகாலத்தவர்கள்.  குளோரியோ ஸ்ரீனெம் அவருக்கு மிகவும் நெருக்கமானவர். பிரென்ச்சின் படைப்புகளை அவர் நன்கு சிலாகிப்பவர். ஆரம்பத்தில் பிரென்ச் எழுத்துத் துறையில் நாட்டம்  கொள்வதற்குச் சிந்தனைத் தளத்தில் இரு நிகழ்வுகள் உந்துதலாக இருந்திருக்கின்றன. ஒன்றுகேற் மிலற் எழுதிய பெண்ணிய ஆய்வுக் கட்டுரைகளடங்கிய Sexual Politics என்ற  முக்கியமான படைப்பினை அவர் வாசிக்க நேர்ந்ததைக் குறிப்பிட முடியும். மற்றது துயரமான சம்பவமான அவருடைய 18 வயது மகள் ஜாமி பாலியல்  வல்லுறவுக்குள்ளானதால் அவருக்கு ஏற்பட்ட அழுத்தமான மனப் பாதிப்பு.
சாதாரண நிலையில் சுமூகமாகவும் அமைதியாகவும் இயங்குபவர் மரிலீன் பிரென்ச். ஆனால் படைப்பாக்க நிலையில் அவருக்குக் கோபமும் கொதிப்பும் ஏற்படக் காரணம்  அவருக்கு உண்மை, சமூக நீதி போன்றவற்றிலிருக்கும் ஆழ்ந்த பற்றுறு தியேயாகும். பெண்களின் அவல நிலைகளுக்கு ஆண்களே எப்போதும் காரணமெனவும் அவர்கள் பெண்கள் மீது கொண்டிருக்கும் வன்மங்களும் விரோதங்களும் ஒருபோதும் விபத்தாக நேர்பவையல்ல என்றும் கூறுகிறார். அவர் பல நாவல்களையும் மற்றும் புனைவு சாரா  வகையில் அடங்கக் கூடிய ஆய்வுக் கட்டுரைத் தொகுதிகளையும் எழுதியிருக்கிறார். பெரும்பாலான படைப்புகளில் தந்தை வழிக் கருத்து நிலைகளுக்கும் மதிப்பீடுகளுக்கும்  ஆட்பட்டி ருக்கும் ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் கலாசாரத் தடைகள் மற்றும் அடக்கு முறைகள் போன்றவை கேள்விக்குள்ளாக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன.
இலக்கிய விமர்சனம் என்ற வகையில் சேக்ஸ்பியர் பற்றிய ஆய்வு நூலொன்றையும் பிரென்ச் எழுதியிருந்தார். அதில் பெண்கள் பாலியல்பு தொடர்பில் சேக்ஸ்பியருக்கு  இருந்த பீதி குறித்து விமர்சனப்பாங்காக ஆராய்ந்திருந்தார். ஒரு நாவலாசிரியை என்ற வகையில் தாம் கொண்டாடப்படுவதைப் பார்க்கிலும் மிகவும் கூர்மையும் விரிவுமான  பெண்ணிய ஆய்வாளராகத் தாம் கவனிப்புப் பெற வேண்டும் என்பதையே அவர் மனதார எதிர்பார்க்கிறார். ஏன் எனில் நுட்பமும் சிரத்தையும் மிக்க பெண்ணிய ஆய்வாளராகத் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை அவர் செலவிட்டிருக்கிறார். கான்சர் வியாதி முற்றிக் கடும் உடல், உள உபாதைகளுக்குட்பட்டுத் தளர்ந்த நிலையிலும்கூட ஆர்வம்  குன்றாது, படைப்பு மனோநிலை தளராது ஆய்வுப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டிருக்கின்றார். இதற்குச் சாட்சியாக அதன் பின்னரும் அவர் வெளியிட்ட பல படைப்புக்கள் திகழ்கின்றன எனலாம்.
மரிலீன் பிரென்ச் தொடர்ந்தும் பல நாவல்களை எழுதியுள்ளார். Bleeding heart, Her Mother’s Daughter, Our Father, In the name of Friendship ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். புனைவு சாரா  படைப்புக்கள் என்ற வகையில் தந்தை வழிமுறைச் சமுதாயம், தாய் வழிச் சமூகம் ஓரங்கட்டப்பட்ட பெண்ணின வரலாறு, அதிகாரத்துக்கு அப்பால்: பெண்கள் ஆண்கள்  மற்றும் ஒழுக்கவியல் குறித்து, பெண்களுக்கு எதிரான யுத்தம் என்ற தலைப்புக்களில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைத் தொகுதிகள் போன்றன அடங்கும். குறிப்பாக வரலாற்றை  விரிவாக உள்ளடக்கிய ஆய்வுத் தொகுதியான From Eve to Dawn என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இவற்றைவிடச் சுயசரிதை சார்ந்த சில படைப்புக்களும் வெளியாகியுள்ளன.
பெண்ணியம் என்பதன் சாரம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது அடிப்படையில் அது எல்லோரும் சமத்துவமானவர்கள் என்பதையே வலியுறுத்துவதாகத்  தெரிவித்திருந்தார். அவருடைய வாழ்வின் இறுதிக்காலத்திலான நேர்காணல்களில் பெண்ணியத்தின் பங்களிப்பு, அதனால் சாதிக்கப் பட்டது போன்றன குறித்து  வினவப்பட்டபோது இளம் தலைமுறையினரிடையே ஒரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள போதிலும் எதிர்பார்த்த பரவலான தாக்கம் ஏற்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்றார். அது தொடர்பில் பெண்களின் நிலை, தரம், அந்தஸ்து குறித்து நிச்சயமாகவே கூடுதலான மாற்றங்களை எதிர்பார்த்திருந்தவர்அதற்காக ஏக்கமுற்று இருந்தவர் என்ற ரீதியிலேயே அவரது பதிலை நாம் புரிந்து கொள்ள முற்பட வேண்டும் என அவரது நெருக்கமான தோழியும் பத்திரிகை ஆசிரியருமான  ஸ்ரேனெம் விபரித்திருந்தது நோக்கத்தக்கது.

      ஈழச் சிக்கலும் புறநானூற்று வீரம்எனும் புனைவும் – தோழர்  பாஸ்கர் 


ஈழச் சிக்கல் இத்தனை ஆண்டுகள் ஆனபின்னரும் தீர்ந்தபாடில்லை, 30 ஆண்டுகால ஆயுதப் போராட் டத்திற்கு பிறகும் தீரவில்லை, தீராததோடு மிகவும் சிக்கலான நிலையில் இருக்கவும் செய்கிறது, அனுபவமும் படிப்பினைகளும் இருப்பதுதான் கிடைத்த ஒரே பலன். எது சரி, எது தவறு என்பது தெளிவாகிவிட்டது. தவறு என்று சொல்லப்பட்ட விசயங்கள் தடுக்கப்பட முடியாமல் போய் சரியான மாற்று எதையும் மேற் கொண்டு நடை முறைக்கு கொண்டு போக முடியாமல் போயிற்று.
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான விமர்சனங்கள் மார்க்சிய அமைப்புகள், முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோரால் வைக்கப்பட்டு அவை சரியென்றே நிருபணமாயின. இதற்கு இவ்வளவு பெரிய இழப்பை, பாதிப்பை, பின்னடைவை விலையாக கட்டாயமாக கொடுக்க வேண்டியதாயிற்று.
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் வழியில் வெளிப்பட்ட இராணுவவாதம் இத்தகைய விலைக்கு காரணமாக இருந்தாலும் புறநானூற்று வீரம்எனும் புனைவு கருந்தாக்கமும் இந்த இராணுவ வாதத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறது.
பேரினவாத, ஏகாதிபத்திய சுரண்டல் அரசியல் நலனுக்காக விளைந்த இச்சிக்கலை எதிர்கொண்ட தமிழ் மக்கள் ஃ அமைப்புகளின் போராட்டங்கள் இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஒடுக்கப்பட்டன.  இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், அரசியல் வழியின் அங்கமாக இராணுவ நடவடிக்கைகளைப் பார்க் காமல் இராணுவ நடவடிக்கைகளே அரசியல் நடவடிக்கை என்பதாக வெளிப்பட்ட அரசியல் வழியே இன்றைக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு பிரதான காரணியாகும்.
விடுதலைப் புலிகளுக்கு அரசியல் இல்லையா என அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் கோபப்படலாம்.  புலிகள் பல பத்திரிகைகளை நடத்தினர் செய்தித் தொடர்பாளர்களை வைத்திருந்தனர்  பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று போர் நிறுத்தங்களைச் செய்திருக்கின் றனர் அனைத்திற்கும் மேலாக தனியரசை அமைத்து பல துறைகளை திறம்பட நடத்தினர் என அவர்கள் வாதிடலாம். இவையெல்லாம் விவரம் என்ற வகையில் உண்மைதான்.
விடுதலைப் புலிகள் இவற்றையெல்லாம் தமது அரசியலால் செய்யாமல் இராணுவ ஆற்றலால் மட்டுமே வளர்ந்து இவற்றை செய்ய முடிந்ததாக கருதினர். இவற்றை தவிர்க்க முடியாததாக வேலைப் பிரிவினை களாக மட்டுமே பார்த்தனர். இவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டதில்லை.  இவை புலிகளின் வீரத்தை புகழ்பாடும் தன்மையானதாகவே இருந்தன. இங்குதான் புறநானூற்று வீரம்எனும் புனைவு கருத்தாக்கத்தினுடைய பாத்திரத்தின் பங்கைப் பார்க்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் இந்தப் புனைவுக் கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே தொடக்கத்திலிருந்து இறுதி வரை செயற்பட்டனர். அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் மே 17-க்குப் பின்னரும் இந்த அடிப்படையிலேயே பேசுகின்றனர்;  எழுதுகின்றனர்;  செயற்படுகின்றனர். இதனால் இந்த ஆதரவாளர்கள் ஏற்பட்ட கடும் இழப்பை இராணுவ மற்றும் அரசியல் அடிப்படைகளில் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்.  வெறுமனே உயிரிழப்பு என்ற வகையில் மட்டுமே வெளிப்படையாக ஒப்புக் கொள்கின்றனர்.தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் மே 16 வரையிலும் விடுதலைப் புலிகளின் பின்னடைவை, இழப்பை பின்வாங்கல் எனவும் போர் உத்தி எனவும் அனுபவம் வாய்ந்த படைத்தலைவர்கள் உயிரோடு இருப்பதால் பெரிய இழப்பு எதுவும் இல்லை எனவும் திட்டமிடப்பட்ட வகையில் பின்வாங்கி சுற்றி வளைத்து எப்படியாவது வலிந்த தாக்குதலின் மூலம் வெற்றி பெற்று விடுவார்கள் என்றே பேசி வந்தனர்.
இதில் எந்த மாறுதலும் இல்லாமல் மே 17க்குப் பின்னரும் பேசி வருகின்றனர். அப்படியானால் மே 17 அன்று என்னதான் நடந்தது? இதைச் சொல்வதில் புறநானூற்று வீரம்எனும் புனைவுக் கருத்தாக்கம் தடுக்கிறது.
இந்தக் கருத்தாக்கம் ஈழத்தில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும் ஏன் புலம் பெயர் ஈழத் தமிழர் வாழும் நாடு களில் அவர்களிடையேயும் செங்கோல் ஆட்சி செலுத்துகிறது.
ஈழப் போரின் மூன்று கட்டங்களிலும் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்த வெற்றிகள் மேலும் இதை உறுதிப்படுத்தின. இந்த வெற்றிகளுக்கு பின்னால் விடுதலைப் புலிகளின் இராணுவ ஆற்றல் மற்றும் அறிவுக்கு முக்கிய பாத்திரம் இருந்தது. ஆனால் இவற் றுக்கு அப்பால் இருந்த காரணிகளின் பாத்திரத்தை அவர்கள் பார்க்கவில்லை.
விடுதலைப் புலிகள் என்ற அகநிலைக் காரணி ஒரு புறம் இருக்க, மறுபுறத்தில் உள்ள புறநிலைக் காரணி கள் அந்த வெற்றிகள் ஈட்டப்பட்டதில் அதற்கேயுரிய பாத்திரத்தை ஆற்றின.
சர்வதேச சூழல் (80களில் முந்நாளைய சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நில விய கெடுபிடிப் போர் முதலானவை), இலங்கை ஆளும் வர்க்கத்திற்கும் ஃ இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு, இலங்கை ஆளும் வர்க்கங் களுக்கு இடையிலான முரண்பாடு, இலங்கை ஆளும் வர்க்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான முரண்பாடு (கடைசி 1980களில் நடந்த ஜே.வி.பி. கிளர்ச்சிகள் இதன் வெளிப்பாடே) ஆகியன அந்த புறநிலைக் காரணிகள் ஆகும்.
தவிர, இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு விடுதலைப் புலிகளை எதிர்கொள்வதற்கு போதிய அனுபவம் இல்லாமல் இருந்ததும் ஒரு காரணம்.
1970 1980களில் அமெரிக்காவிற்கும் முந்நாளைய சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் கெடுபிடிப் போர் நிலவியது. பாலஸ்தீன விடுதலை அமைப்பு (Pடுழு) ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (யுNஊ), சாம் நுஜோமா தலைமையிலான நமீபிய விடுதலை இயக் கம் உள்ளிட்ட அமைப்புகள் இதைப் பயன்படுத்தி முந்நாளைய சோவியத் ஒன்றியத்தின் ஆதரவு மற்றும் உத வியை பெற்றுக் கொண்டன.
அதேபோல் ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களும் அங்கோலாவில் யுனிட்டா அமைப்பினரும் அமெரிக் காவின் ஆதரவு மற்றும் உதவியைப் பெற்றுக் கொண் டன.
1983 – 1987 வரையிலான காலகட்டத்தில் இந்திய ஆளும் வர்க்கம் விடுதலைப்புலிகள், டெலோ, ஈ.பி. ஆர்.எல்.எப். புளொட் ஆகிய அமைப்புகளுக்கு எல்லா விதமான உதவிகளையும் செய்து, ஈழ விடுதலைப் போராட்டம் சுயமாக வளர்ந்து விடக்கூடாது எனவும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண் டும் எனவும் இலங்கையில் அப்போது இருந்த ஜெய வர்த்தனே அமெரிக்க சாய்வாக இருந்ததால் அவரை அடக்கி வைக்கவேண்டும் எனவுமே ஈழப் போராளி களுக்கு இத்தகைய உதவியைச் செய்தது.
இலங்கையில் 1987 – 90 காலப் பகுதியில் இந்திய இராணுவம் அமைதி காப்புப்படை என்ற பெயரில் இருந்தபோது அதை வெளியேற்ற வேண்டும் என்பதற் காக அப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசாவின் இராணுவ உதவியை விடுதலைப் புலிகள் பெற்றுக் கொண்டனர்.
இவ்வாறாக, விடுதலைப் புலிகள் தமது சொந்த முயற்சியில் வளர்த்துக் கொண்ட இராணுவ அறிவு மற்றும் ஆற்றல் மட்டும் இல்லாமல் இந்திய அரசாங் கம் மற்றும் இலங்கை ஜனாதிபதியாக இருந்த பிரேம தாசாவின் இராணுவ உதவியையும் பயன்படுத்திக் கொண்டனர்.
இதில் சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கும் முந்நாளைய சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான முரண்பாடு, இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் இலங்கை ஆளும் வர்க்கம் ஃ இலங்கை அரசாங்கத்திற்கும் இடை யிலான முரண்பாடு ஆகியவற்றை பயன்படுத்திய அரசி யல் பார்வை வெளிப்படுவதே அல்லாமல் புலிகளின் இராணுவ ஆற்றல் மற்றும் அறிவு மட்டுமே வெளிப் படவில்லை. இங்கு புறநானூற்று வீரம்என்ற புனை வுக் கருத்தாக்கத்திற்கு அறவே இடம் இல்லை.
இதைச் சொல்லும்போது ஒரு புறத்தில் புலிகளி டம் அரசியல் பார்வை இருக்கிறது அல்லவா எனவும் மறுபுறத்தில் 21ஆம் நூற்றாண்டிலும் முப்படைகளை யும் வைத்திருந்த ஒரே விடுதலை இயக்கம் புலிகள் தானே எனவும் கேள்விகள் எழலாம்.
முதலில் உள்ள கேள்விக்கு பதில் என்னவென்றால், புலிகளிடம் உத்தி, என்ற வகையில்தான் ஆளும் வர்க்க முரண்பாட்டை பயன்படுத்தும் அணுகுமுறை இருந் ததே அல்லாமல் பார்வை என்ற வகையில் அல்ல என் பதே ஆகும்.
பார்வை என்ற அளவிற்கு அது இருந்திருந்தால் ஆளும் வர்க்க முரண்பாட்டை பயன்படுத்தும் விதமாக நான்காம் கட்ட ஈழப் போருக்கு முன்பாகவோ தொடங்கிய பின்போ சீனாவிடமோ பாகிஸ்தானிடமோ சென்றிருப்பர்.
இரண்டாம் கேள்விக்கு பதில் என்னவெனில், தரவு என்ற வகையில் அது உண்மைதான்.  ஆனால் அரசியல் இல்லாததால் அதைக் காப்பாற்றிக் கொள்ளாமல் போய்விட்டது. நேபாள மாவோயிஸ்ட் கட்சியோ முப்படைகள் இல்லாமல் (தரைப் படையை மட்டும் வைத்திருக்கின்றது) அமெரிக்காவும் ஃ இந்தியாவும் எல்லா வகையிலும் தலையிடுவதற்கு தயாராக இருந்த போதும் ஃ இருக்கும்போதும் தனது அரசியல் பார்வை யால் அத்தகைய தலையீடுகளைத் தள்ளிப்போட வைத்தது அல்லது அதன் தீவிரத்தை மட்டுப்படுத்தும் அரசியல் செயலுத்தியை மேற்கொண்டு தனது படை யையும் தலைமையையும் காபபாற்றிக் கொண்டது ஃ காப்பாற்றிக் கொள்கிறது.
விடுதலைப் புலிகள் நான்காம் கட்ட ஈழப் போரில் புறநிலைக் காரணிகள் மாறியதையும் அவை தங்களுக் குப் பாதகமாக இருப்பதையும் ஆழமாக உணரத் தவறி விட்டார்கள்.இந்தியாவிற்கு ஈழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நலன் ஏற்கெனவே இருந்து வருவதுடன் அது வெளிப்படவும் செய்தது.  அது இந்த நான்காம் கட்ட ஈழப் போரில் இலங்கையின் மீதான மேலாதிக்கப் போட்டியில் சீனா இறங்கியதாலும் ராஜபக்சேவுக்கு உதவாவிட்டால் அவர் சீனா அல்லது பாகிஸ்தானின் உதவியை அதிகமாக பெற்று தனது பிடி அவர் மீது தளர்ந்துவீடும் என்ற கவலை இந்தியாவிற்கு இருப்ப தாலும் அவருக்குதவிய இந்த முக்கிய புறக்காரணியை புலிகள் பார்க்கத் தவறிவிட்டனர். மே 16 வரையிலும் இதனுடைய முக்கியத்துவத்தைக் காணத் தவறினர்.
கடந்த 10 ஆண்டுகளாக தனியரசை நடத்தியதில் பலப்பட்ட புறநானூற்று வீரம்எனும் புனைவுக் கருத்தாக்கம் இயங்காவியலை (ஆநவயயீhலளiஉள) அடிப் படையாகக் கொண்டதால் அது நிலைமைகள் எப் போதும் மாறிவருவதை பார்ப்பதைத் தடுத்தது.
தாங்கள் வெல்லப்பட முடியாதவர்கள் எனவும் அழிக்கப்பட முடியாதவர்கள் எனவும் சாசுவதமாக இருந்ததால் இப்படித்தான் இருக்க முடிந்தது.
மேலும் ஓபாமாவின் வெற்றியையும் ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கையும் சாசுவதமானதாகவும் முழுமுதலானதாகவும் அனைத்துந்தழுவியதாகவும் பார்த்தது.
அனைத்திலும் முக்கியமாக எதிரியை நண்பனாக பாவித்தது என்பது இந்தியா மீதான அதீத எதிர்பார்ப் பில் வெளிப்பட்டது.
1983 – 87 காலகட்டம் வரையில் நண்பனாக நடித்த இந்திய ஆளும் வர்க்கத்தின் நிறம் மாறிய பின்னரும் இன்று வரையிலும் அதனை பொதுவாக நண்பனாக வும் துரோகியாகவும் குறிப்பாக வழி தவறிய நண்பனா கவும் வழி தவறிய துரோகியாகவும் கருதி அதை மனம் மாற வைக்கமுடியும் எனவும் எண்ணுகிறது.
இந்திய ஆளும் வர்க்கம்தான் ஈழ மக்கள் புலி களுக்கு விரோதமான ராஜீவ் ஃ ஜெயவர்த்தனே ஒப் பந்தத்தை ஏற்படுத்தி இந்திய ஆக்கிரமிப்பு படையை அனுப்பி புலிகளை ஒழித்துக் கட்ட முற்பட்டது. ராஜீவ் கொலைக்கு பின்னர் புலிகளின் அமைப்பை இன்று வரையிலும் தடை செய்து வருவதுடன் புலி ஆதரவுச் செயற்பாட்டை தடுத்து வருகிறது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப் பற்ற முற்பட்டபோது அதைத் தடுத்தது. கருணாவை உடைத்தது. இறுதியாக நான்காம் கட்ட ஈழப் போரின் தொடக்கம் முதற்கொண்டு இன்று வரையிலும் ராஜ பக்சேவுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.
நண்பனாக நடித்து எதிரியாகிப் போன இந்தி யாவை 20 ஆண்டுகள் ஆகியும் அதைப் புரிந்துகொள்ள தடையாக இருந்து வருவது இயங்காவியல் அணுகு முறையே ஆகும்.
இப்பொழுது. புறநானூற்று வீரம்என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.சங்க இலக்கியத்தை அதிகமாக மேற்கொள் காட்டி பேசப்படுகின்ற புறநானூற்று வீரம்என்பது உண்மை யிலேயே அந்த காலத்தில் தமிழ் பேசிய பல்வேறு இனக் குழுக்களிடையே நடந்த சண்டைகளும் மோதல் களுமே ஆகும். முற்கால மூவேந்தர்களிடையே ஏற் பட்ட சண்டைகளுமே ஆகும்.
இந்தச் சண்டைகள் தமிழ் பேசிய மக்களை ஆண்டு சுரண்டுவதற்காகவே நடந்தன. தமிழ் பேசிய இந்த மக்கள் மீது வேற்று இனம் ஃ மொழியினர் படை யெடுத்து வந்து அதை முறியடிப்பதற்காக இந்தச் சண்டைகளோ போர்களோ நடக்கவில்லை. இதற்கு பின் இருந்த பிற்கால சோழர் ஆட்சியும் பிற்கால பாண் டியர் ஆட்சியும் கூட தமிழ் மக்களை சுரண்டுவதற்காக சண்டையிட்டு நிறுவப்பெற்ற ஆட்சிகளே. இதில் பிற்கால சோழ மன்னர்களோ ஈழத்தையும் இன்றைய தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கம்போடியா ஆகிய நாடுகளையும் ஆக்கிரமித்து (தமிழ்நாட்டை ஆண்ட தமிழ்ப் பேரரசர் கள் என சிலாகிக்கப்படும் பிற்கால சோழப் பேரரசர்கள் ஈழத்தை ஆக்கிரமித்தனர் என்றே சொல்ல வேண்டும்) ஆண்டு கொழுத்தனர். இந்த ஆட்சிகள் எவையும் தமிழ் மக்களுக்கு நன்மை எதுவும் செய்யவில்லை. மாறாக சுரண்டவே செய்தன. இதில் பிற்கால சோழப் பேரரசர் களின் ஆட்சியில் தமிழ்நாட்டில் ஃ ஈழத்தில் சாதியம் நன்றாக நிறுவன மயமாகி கோலோச்சியது.
நிறுவனமயமாகி இறுகிப்போன அந்தச் சாதியத் தின் கொடுமையிலிருந்தோ சிந்தனையிலிருந்தோ இன்றும் தமிழ்நாடு மற்றும் ஈழம் விடுபடவேயில்லை.  இத்தகைய பிற்கால சோழப் பேரரசர்களில் ஒருவரான இராஜராஜ சோழனைத்தான் புறநானூற்று வீரம்பேசும் பயந்தாங்கொள்ளி கருணாநிதி போற்றிப் புகழ்
பாடுவார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழக அதிகார வர்க்கம் ஃ அரசு எந்திரம் 1000ஆம் ஆண்டு விழாவை நடத்தியது.
ஈழத்தையும் ஆக்கிரமித்து அங்கு சாதிய சமூகத்தை நிலைநாட்டிய இந்தப் பிற்காலச் சோழப் பேரரசர் களின் இலச்சினை புலி ஆகும். அதைத்தான் புலிகள் அமைப்பு தமது அமைப்பின் பெயராக சூடிக் கொண் டது. ஈழ மக்களின் சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கி அதை ஆக்கிரமித்து அங்கு சாதிய நிலவுடை மையை அமைத்த சோழர்களின் இலச்சினையையே புலிகள் அமைப்பு தனது அமைப்பின் பெயராக வைத் துக் கொண்டது வரலாற்று முரணே ஆகும். மேலும் புலிகள் ஈழத்தில் வாழ்ந்து போராடிய மக்களை கதா நாயகர்களாகப் பார்க்காமல் அவர்களை சுரண்டி ஆட்சி நடத்திய எல்லாளன், சங்கிலியன் போன்றவர் களையே கதாநாயகர்களாகவும் குறியீடுகளாகவும் சித்தரித்தனர்.
சங்க இலக்கியம் சித்தரிக்கும் காலப்பகுதியில் நடந்த இனக்குழுச் சண்டைகள் போன்றே இன்றைய ருவாண்டாவில் கடந்த 10 – 15 ஆண்டுகளுக்குமுன் 5 – 10 இலட்சம் பேர் இறக்கின்றவாறு ஹட்டு (outu) என்ற இனக் குழுவிற்கும் டுட்ஸி (Dutsi)) என்ற இனக்குழவிற் கும் சண்டைகள் நடந்தன. இந்தச் சண்டைகளை எப் படி வீரம் என்று சொல்ல முடியாதோ அதுபோன்றே தொடக்ககால தமிழகத்தில் நடந்த இனக்குழு சண்டை களையும் வீரம் என்று சொல்ல முடியாது.
தமிழ் மக்களை ஆண்டு சுரண்டி கொழுக்கவேண் டும் என்பதற்காக நடந்த இனக்குழு மோதல்களையும் பிற்காலச் சோழப் பேரரசர்களின் படையெடுப்புகளை யும் ஆக்கிரமிப்புகளையும் எவ்வாறு தமிழனின் வீரம் என்றோ, புறநானூற்று வீரம் என்றோ கொண்டாட முடியும்? இவ்வாறு கொண்டாடுவோர் எல்லோருமே சுரண்டல் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவே இருக்கின்ற னர். கருணாநிதி, வைகோ, தொல். திருமாவளவன், ராம தாஸ் மற்றும் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளின் நிர்வாகிகள் இவ்வாறே செயற்படுகின்றனர்.
புறநானூற்று வீரம்என்று சொல்லப்படும் காலப் பகுதியில்தான் பௌத்தமும் சமணமும் இங்கு வந்து உயிர்களின் கொல்லாமையை வலியுறுத்திப் பேசன.
உழவர்களாகவும் கால்நடை மேய்ப்போராகவும் கைவினைஞர்களாகவும் இருந்த தமிழக உழைப்பாளி மக்கள் இதற்கு ஆதரவை அளித்தனர். உழைக்கும் மனித உயிர்களையும் கால்நடைகளையும் இத்தகைய இனக்குழு மோதல்களில் பலி கொடுத்த தமிழக உழைக் கும் மக்கள் அதை தவிர்க்கும் முகமாக இந்த நிலையை மேற்கொண்டனர். மறுபுறத்தில் முற்கால மூவேந்தர் களும் பௌத்த, சமண கருத்தியல்களை வரவேற்றனர்.  ஏற்கனவே சுரண்டல் நலனுக்காக பெற்ற மேலாதிக் கத்தை தக்க வைக்கும் முகமாக போர்கள் இல்லாத சமூகம் தற்காலிகமாகவேனும் பயனைத் தரும் என்ற வகையில் அந்தக் கருத்துகளை ஆதரித்தனர். இந்த வகையில் புறநானூற்று வீரம்”  என்ற வகையிலான மோதல்கள் குறைந்து பேரரசுகள் வகையிலான ஆட்சி வந்தது.
பின்னர் தமிழ் மன்னர்களின் புறநானூற்று வீரம்”  காணாமல் போய் நாயக்கர் ஆட்சியும் மராத்தியர் ஆட் சியும் ஆற்காடு நவாப் ஆட்சியும் வெள்ளைக்காரர் களின் ஆட்சியும் நடந்தன.
வெள்ளைக்காரர்களின் ஆட்சியை எதிர்க்க வக் கற்ற புதுக்கோட்டை தொண்டைமான், இராமநாத புரம் சேதுபதி போன்ற புறநானூற்று வீரம்”  மன்னர் கள் அவர்களோடு சமரசம் செய்து தமிழ் மக்களை சுரண்டி கொழுத்தனர்.  சேதுபதி மன்னருக்கு நான்காம் தமிழ்ச் சங்கம் அமைக்கத் தெரிகிறது. வெள்ளைக் காரர்களை எதிர்க்கத் திராணியில்லை. அதன்பிறகோ கடந்த 60 ஆண்டுகளாக தமிழக மக்கள் விரோத இந் திய அரசாங்கத்தின் நுகத்தடி ஆட்சிதான் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு முன்பு தோன் றிய தி.மு.க. வின் தலைவர்கள் அன்றிலிருந்து இன்று வரை புறநானூற்று  வீரம்”  பேசியே தமிழக மக்களை மழுங்கடித்தனர். அந்தப் பரம்பரையில் தோன்றிய வைகோவும் இதையே சிரமேற்கொண்டு செய்து வரு கிறார். வன்னிய ஷத்திரிய பரம்பரையில் சித்ரா பௌர்ணமி போல உதித்த ராமதாசுவும் திமுகவாக அவதாரமெடுத்துள்ள தொல். திருமாவளவனும் இதற்கு விதிவிலக்கல்ல.  மாவீரன் நெடுமாறனோ ஒரு தமிழனைக் கூட வீரனாக்காமல் இருந்து வருகிறார்.
மேலும் பெரும்பாலான தமிழ் தேசிய அமைப்பு களின் செயற்பாடுகளோ அரங்க கூட்டத்தை தாண்டு வதில்லை. அரங்கத்திற்குள்ளேயே புறநானூற்று  வீரம்பேசிப் பேசி சுய திருப்தி அடைந்து வருகின்ற னர்.
இந்தப் புறநானூற்று வீரம்என்ற புனைவுக் கருத் தாக்கத்தில் இன்னொரு அம்சமும் உண்டு. அதாவது உலகிலேயே தமிழினத்தை போல் வேறு எந்த இனமும் வீரமான இனம் இல்லை என்பதே அது. அவ்வாறு உண்மையாக இருக்குமானால் தமிழ்நாட்டிலோ, ஈழத்திலோ கடந்த நூற்றாண்டுகளாக தமிழர்கள் ஏன் வேற்றினத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள்?
மனிதகுல வரலாற்றில் எந்த இனமும் வீரத்திற்கு குத்தகை எடுத்துக் கொண்டது கிடையாது. எல்லா இன மக்களும் வீரத்துடன்தான் இருந்து வருகின்றனர்.  தமிழ்நாட்டில் நடந்ததைப் போன்ற இனக்குழு மோதல்கள் எல்லா நாடுகளிலும் நடந்திருக்கின்றன.  ஆனால் இங்கு தான் (ஈழம் ஃ தமிழ்நாடு) வீரம் பற்றிய புனைவுக் கருத்தாக்கம் இந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்தி வருகிறது. இதுதான் தமிழ் மக்களை போராட விடாமல் தடுக்கிறது. தலைவர்கள்/கதா நாயகர்கள் கிடைக்க மாட்டார்களா என ஏங்க வைக்கிறது. புறநானூற்று வீரம்பேசும் புனைவர்கள் என்ன புனைவை புனைந்தாலும் நம்ப வைக்கிறது. கேவலம் சீமான் போன்றவர்கள் ஈழ விடுதலையை வாங்கித் தர மாட்டார்களா என அவரின் வாய்ச்சவாடால் கூட்டத் திற்கு அணி திரள வைக்கிறது. சீமான் போன்றவர்கள் தமிழின உணர்வு பற்றி பேசுவதற்கு தமிழ் மக்கள் பல ஜென்மங்களுக்கு முன்செய்த பாவச் செயல்தான் கார ணம் எனத் தோன்றுகிறது.
மேலும் இந்தப் புனைவுக் கருத்தாக்கம் உண் மையை உரைக்காது. தான் செய்கின்ற எதையும் நியா யப்படுத்தும். அனைத்தும் வீரச் செயலே என வீராப் பாக பேச வைக்கும். தோல்வியை (அ) பின்னடைவை ஒப்புக் கொள்ளாது.
உண்மையை உணர்ந்தால்தானே, தோல்வியை (அ) பின்னடைவை ஒப்புக்கொண்டால்தானே படிப் பினையை எடுத்துக் கொள்ளமுடியும்.
அவ்வாறு வரும் படிப்பினை இந்த புனைவுக் கருத் தாக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும். அதனால் தான் இந்த புனைவுக் கருத்தாக்கத்தை பேசிப் பேசியே தமிழ் மக்களை மதி மயங்க வைத்து நிரந்தர அடிமைகளாக ஆக்குகின்றனர்.
இந்தப் புனைவுக் கருத்தாக்கத்திலிருந்து விடுபட் டால்தான் தமிழ்நாடு ஃ ஈழ மக்கள் அனைத்து அடிமைத் தனங்களிலிருந்தும் விடுதலை அடையமுடியும்.

மனித குல வரலாற்றில் முன்னெப்போதையும் விட 21ஆம் நூற்றாண்டில்தான் அரசியல் தேவைப்படு கிறது. அரசியலின் மூலமே இந்த நூற்றாண்டை புரிந்து கொள்ளவும் ஆளவும் முடியும். அரசியலுடன் பொரு ளாத அடிப்படையுடன் அமைந்த வீரமும் இருந்தால் தான் இதைச் சாதிக்க முடியும்.